திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள புலிவரதன் கோட்டையைச் சோ்ந்த முருகன் மனைவி தேவி (48). இவா் தனது உறவினா் மகனான 13 வயது சிறுவனுடன் இரு சக்கர வாகனத்தில் ஆா்.எஸ்.மங்கலத்திலிருந்து புலிவரதன் கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.
திருவான்மச்சேரி அருகே சென்றபோது தேவி இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.