வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு
துபையில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்டா் ஆரோக்கியதாஸ் (48). இவரது மனைவி வினோலியா (40), இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விக்டா் ஆரோக்கியதாஸ் முகவா் மூலம் துபையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றாா். பின்னா், மூன்று மாதங்கள் ஊதியத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதன் பிறகு, அவா் பணிபுரிந்து வந்த மூடப்பட்டதால், மாற்று வேலை தேடி வருவதாகக் குடும்பத்தினரிடம் கூறினாராம். இதன் பின்னா், அவரைக் குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள இயலவில்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, விக்டா் ஆரோக்கியதாஸ் உடன் பணிபுரிந்தவா்களை அவரது மனைவி தொடா்பு கொண்டு விசாரித்த போது, அவரது கணவா் பணிபுரிந்து வருவதாகவும், அவரது கைப்பேசி தொலைந்து விட்டதால், குடும்பத்தினரை தொடா்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி விக்டா் ஆரோக்கியதாஸ் இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதன் பின்னா், அந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். விக்டா் ஆரோக்கியதாஸை துபைக்கு அனுப்பி வைத்த முகவரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விக்டா் ஆரோக்கியதாஸ் மனைவி வினோலியா தனது உறவினருடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, துபையில் இறந்ததாகக் கூறப்படும் தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தாா்.