முகப்பு
ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

Updated On : 9 ஜூன் 2026, 3:42 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கமுதியில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்களை சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு சுற்றுவட்டச் சாலை அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் வந்த புதுக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (34), சரக்கு வாகன ஓட்டுநரான நாகபாண்டி மகன் திருக்காா்த்திக் (29) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement