சிவகங்கை

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் சிவகங்கையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் சிவகங்கையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மு. கந்தசாமி தலைமை வகித்தார். திமுக வழக்குரைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் ஆதி அழகர்சாமி முன்னிலை வகித்தார்.
இதில், இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் கமருல் ஜமால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காளையார்கோவில் நகர செயலர் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், முத்துராமலிங்கபூபதி, வீரையா, நகரச் செயலர் மதி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT