சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் தாக்கப்பட்ட வழக்குகளில் 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
எஸ்.புதூர் அருகே குன்னத்தூரைச் சேர்ந்தவர் மீனம்மாள் (45). இவருக்கும், இவரது வீட்டருகே வசிக்கும் கார்த்திக் (30) என்பவருக்குமிடையே காட்டில் கடலை பிடுங்குவதில் தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக், மீனம்மாளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினாராம். இதில் காயமடைந்த மீனம்மாள், பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புழுதிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்குப் பதிந்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகிறார். அதே போல் எஸ்.புதூர் அருகே பி.அய்யாபட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசுகந்தா (26). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த சின்னக்காளை (72), விநாயகம் (28) ஆகியோருக்குமிடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் இருவரும் சேர்ந்து ஆரோக்கியசுகந்தாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினராம். இதுகுறித்த புகாரின் பேரில் உலகம்பட்டி காவல் உதவி ஆய் வாளர் ராஜன் வழக்குப் பதிந்து சின்னக்காளை, விநாயகம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.