சென்னையில் பயிற்சி முடித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 காவல் சார்பு-ஆய்வாளர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வந்த 25 பேருக்கு சார்பு-ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களுக்கு சென்னையில் உள்ள வண்டலூர் போலீஸ் பயிற்சி அகாடமியில் கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பயிற்சி முடிந்து இவர்கள் சிவகங்கை மாவட்டத்துக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மாவட்டத்தில் புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.