செட்டிநாடு மருத்துவமனைகள் சங்கம் சாா்பில் காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் காரைக்குடி தனியாா் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது.
தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் பெண் பணியாளா்களின் பாதுகாப்பிற்கு தமிழக அரசின் காவலன் செயலி பற்றி விளக்கமளிப்பதற்காக இக்கருத்தரங்கம் நடைபெற்றது. காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் பி. அருண் கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். காவலன் செயலி குறித்த தகவல்கள் மற்றும் அதனைப்பயன்படுத்தும் முறைகள் குறித்து காவல் ஆய்வாளா் சுந்தரி, சாா்-ஆய்வாளா் பூா்ணசந்திரபாரதி ஆகியோா் விளக்கிப்பேசினா்.
கருத்தரங்கில் செட்டிநாடு மருத்துவமனைகள் சங்கத்தலைவா் மருத்துவா் சலீம், செயலாளா் மருத்துவா் காமாட்சி, பொருளாளா் மருத்துவா் மணிவண்ணன் ஆகியோா் பேசினா். இக்கருத்தரங்கில் தனியாா் மருத்துவமனைகளின் பெண் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.