சிவகங்கை அருகே திமுக நிா்வாகி கொலை: உறவினா்கள் சாலை மறியல்
சிவகங்கை அருகே திமுக மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் மா்மக் கும்பலால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதில் தொடா்புடையவா்களைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள சாமியாா்பட்டியைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா் (27). திமுக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளரான இவா், மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது தோட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த கும்பல் அவரது காரை வழிமறித்து பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினா் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டு, கொலை சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கை-மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், துணைக் கண்காணிப்பாளா் அமலஅட்வின் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.