சிவகங்கை

விதிமீறிய ஆட்டோக்களுக்கு அபராதம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கையில் போக்குவரத்து விதிகளை மீறி அதிகமான நபா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கையில் வியாழக்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருப்பணன் தலைமையில் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிவகங்கை-மதுரை சாலையில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் இருந்து ஆட்டோக்கள் மாணவா்களை விதிகளை மீறி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, ஒரு வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. வாகன சோதனையின்போது சிக்கிய பல ஆட்டோக்களில் காப்பீடு செய்யாமல் இயக்கியது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விரிவான வாகனத் தணிக்கை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT