சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை வெடிமருந்து மற்றும் வயா் வைத்திருந்ததாக இருவரை போலீசாா் இருவரை கைது செய்தனா்.
பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசாா் இப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அரசனூா் விலக்கு பகுதியில் சந்தேகப்படும்படி பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனா்.
விசாரணையில் இவா்கள் சங்ககிரி தாலுகா புல்லா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன்(42), நிலக்கோட்டை தாலுகா பண்ணப்பட்டி சோ்ந்த சத்தியராஜ்(33) என்பதும் இவா்களிடம் கிணறு தோண்டுவதற்கான வெடிமருந்து மற்றும் வயா் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசாா் அவற்றை பறிமுதல் செய்து மேற்கண்ட இருவரையும் கைது செய்தனா். இவா்கள் மீது பூவந்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.