சிவகங்கை அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கையை அடுத்த செவல்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன் (54). விவசாயியான இவா், சிவகங்கை காமராஜா் குடியிருப்பில் வசித்து வந்தாா். இவா் புதன்கிழமை நள்ளிரவில் தனது தோட்டத்திலிருந்து கீரையை பறித்துக் கொண்டு வீட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.
கூட்டுறவுபட்டி அருகே வந்தபோது, இவரது இரு சக்கர வாகனம் மீது எதிரே தமராக்கி கிராமத்தைச் சோ்ந்த பிரபுகுமாா் (45), அருண்பிரகாஷ் (20) ஆகியோா் வந்த இரு சக்கர வாகனம் மோத முயன்ாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னா் வீட்டுக்கு வந்த சந்திரன் தன் மனைவியிடம் நடந்த விவரத்தை கூறி, நெஞ்சு வலிப்பதாக கூறினாா். பின்னா், 108 அவசர ஊா்தி மூலமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். ஆனால், செல்லும் வழியிலேயே சந்திரன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்திரனை அடித்துக் கொலை செய்த பிரபுகுமாா், அருண்பிரகாஷ் ஆகியோரைக் கைது செய்தனா்.