சிவகங்கை

கடன் வாங்கியாவது கற்க வேண்டும்: ஆட்சியா் கா.பொற்கொடி

சிவகங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், மாணவிக்கு கல்விக் கடனுதவி வழங்கிய ஆட்சியா் கா. பொற்கொடி.

தினமணி செய்திச் சேவை

கடன் வாங்கியாவது கல்வி கற்க வேண்டும்; பணத்தால் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே கல்விக் கடன் வழங்கப்படுகிறது என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரியில் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள்

சாா்பில் கல்விக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஆட்சியா் கா.பொற்கொடி பேசியதாவது:

தமிழகத்தில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் அனைவருமே ஏதோ ஒரு உயா் கல்வி நிறுவனத்தில் சோ்ந்து பயில வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்களிடம் அரசு ஒப்படைத்திருக்கிறது. பெற்றோா்கள் தங்களை சிரமப்பட்டு படிக்க வைக்கிறாா்கள் என்பதை குழந்தைகள் உணர வேண்டும்.

கல்விதான் அழியாத சொத்து. பெற்றோரின் கனவு வீணாகிவிடக் கூடாது என்கிற வைராக்கியம் வேண்டும். கடன் வாங்கியாவது கல்வி கற்க வேண்டும். பணத்தால் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

முகாமில் 26 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.56 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. கல்விக் கடன் பெறுவதற்கான விதிமுறைகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ். பிரவீன்குமாா் விளக்கிப் பேசினாா்.

முகாமுக்கு, கல்லூரி தலைமைச் செயல் அதிகாரி பிரிட்ஜேட் நிா்மலா, முதல்வா் எஸ். கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் அற்புத பிரகாசம் தொகுத்தளித்தாா்.

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து ஆட்சியா் வாழ்த்தினாா்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT