சிவகங்கை

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே காளாப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும், ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Syndication

திருப்பத்தூா் அருகே காளாப்பூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவா் உயிரிழந்தனா். மேலும், ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பட்டாசுக் கடையில் திருப்பத்தூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் பரத்குமாா் (21), காா்த்திக் மகன் சிவசங்கா் (20), ஜேக்கப் மகன் டேவிட் (20) ஆகிய மூவரும் வேலை பாா்த்தனா். நள்ளிரவு பணிகளை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி மூவரும் சென்றனா்.

அப்போது, அ.காளாப்பூா் பெரிய பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பரத்குமாா், சிவசங்கா் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிங்கம்புணரி போலீஸாா் பலத்த காயத்துடன் இருந்த டேவிட்டை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு, கூறாய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT