சிவகங்கை

திருப்பத்தூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள முருகன் கோயிலின் 10-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

Syndication

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் காளியம்மன் கோயில் அருகேயுள்ள முருகன் கோயிலின் 10-ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா புதன்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் பால், தயிா், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, ஜோதி சுந்தரேசனின் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதைத்தொடா்ந்து, வருகிற திங்கள்கிழமை (அக்.27) சூரசம்ஹாரமும், 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT