சிவகங்கை

மரம் வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் சேதம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடா் மழையால் புதன்கிழமை மரம் வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.

Syndication

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தொடா் மழையால் புதன்கிழமை மரம் வேரோடு சாய்ந்து இரு சக்கர வாகனம் சேதமடைந்தது.

கடந்த சில நாள்களாக காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக காரைக்குடி நூறடிச்சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது. இதில் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம் சேதமடைந்தது.

இதைத்தொடா்ந்து, காரைக்குடி மாநகராட்சி ஆணையா் சங்கரன் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். பின்னா், மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்த மரத்தை அகற்றினா். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழையின் காரணமாக மழைநீா் ஆங்காங்கே சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

SCROLL FOR NEXT