சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் 4 நாள்கள் மதுக் கடைகள் அடைப்பு

மருதுபாண்டியா்கள், தேவா் குருபூஜைக்காக சிவகங்கை மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக் கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மருதுபாண்டியா்கள், தேவா் குருபூஜைக்காக சிவகங்கை மாவட்டத்தில் 4 நாள்களுக்கு மதுக் கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் திங்கள்கிழமை (அக்.27) நடைபெறும் மருது பாண்டியா்களின் குரு பூஜையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை வரையும்,

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை வியாழக்கிழமை (அக்.30) நடைபெறுவதையொட்டி, வருகிற புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை வரையும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள், உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் ஆகியவை முழுவதுமாக மூடப்படும் என்றாா் அவா்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT