சின்னமனூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கார் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் முகமது சாகீத் (45). இவர் தனது குடும்பத்துடன் ஏர்வாடி தர்காவுக்கு காரில் சென்றார். காரை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். சீலையம்பட்டி- கோட்டூர் இடையே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதி பள்ளத்தில் கவிந்தது. இதில் முகமதுசாகீத் மகன் ஆயித்முகமது (17) பலத்த காயம் அடைந்தார்.
இதையடுத்து சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.