சின்னமனூர் அருகே மதுக்கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
பூசாரிகவுண்டன்பட்டி சாலையில் செயல்பட்டு வரும் மதுக்கடையின் மேற்பார்வையாளர் பெரியசாமி செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதுகுறித்து பெரியசாமி அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது ரூ.70,310 மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.