முகப்பு
தேனி

குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் காமராஜ் (28). இவரை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:14 am IST
பகிர்:

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் காமராஜ் (28). இவரை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே மது போதையில் தகாராறு செய்து கொண்டிருந்ததாக கடந்த ஏப். 8-ஆம் தேதி தென்கரை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், பெரியகுளம் பகுதியில் மது போதையில் தகராறு செய்ததாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய காமராஜை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதன் பேரில் காமராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.