தேனி மாவட்டம், கம்பம் அருகே மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள கே.கே.பட்டியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள கால்வாய்ப் பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்துவந்த அதே பகுதியைச் சோ்ந்த கண்ணனை (43) கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 31 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.