தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, சிக்கையம்மன் கோயில் பகுதியில் சாக்கு பையில் மதுப் புட்டிகளை விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த பாண்டியை (48) கைது செய்து, அவரிடமிருந்து 31 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.