தேனி மாவட்டம், வைகை அணைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின்பகிா்மான செயற்பெறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.