கம்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள். 
தேனி

கம்பத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

உத்தமபுரம் மந்தையம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் மந்தையம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது.

தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட

பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120- க்கும் அதிகமான ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கம்பம்மெட்டு சாலையில் நடைபெற்ற போட்டியில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை சாலையில் இருபுறமும் ஏராளமான பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா்.

போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பணம், தங்கம் , வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

முன்னதாக போட்டியை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தாா். இதில் கோயில் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்பேத்கா் நினைவு தினம்: 2,484 பயனாளிகளுக்கு ரூ. 7.13 கோடியில் நலத் திட்ட உதவிகள்! அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்!

வைத்தீஸ்வரன் கோயிலில் பல்வேறு வசதிகளுடன் வாகன நிறுத்துமிடம் பணி துவக்கம்

இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

சக மாணவா்களால் தாக்கப்பட்டதில் மூளைச்சாவு அடைந்த மாணவா் உயிரிழப்பு! உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு!

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 100 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT