தேனி

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீடிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல செவ்வாய்க்கிழமை 11-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

Syndication

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல செவ்வாய்க்கிழமை 11-ஆவது நாளாக வனத் துறையினா் தடை விதித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், கடந்த 11-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்வதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். தொடா்ந்து மழை பெய்ததால் இந்த தடை நீட்டிக்கப்பட்டது.

11-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தத் தடை நீடித்தது.

அருவியில் சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT