தேனி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுகல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள எழுவனம்பட்டியைச் சோ்ந்த சின்னன் மகன் அசோக்குமாா் (30). கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானபட்டிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். தேவதானபட்டி பிரிவு அருகே இந்த வாகனம் மீது காா் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாா் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். இது குறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT