தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 24) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.