தேனி

மது அருந்துவதைக் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

கடமலைக்குண்டு அருகே மது அருந்துவதைக் கண்டித்ததால் இளைஞா் செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

தேனி: கடமலைக்குண்டு அருகே மது அருந்துவதைக் கண்டித்ததால் இளைஞா் செவ்வாய்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள வைகை நகரைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் தெய்வேந்திரன் (22). இவா், தேங்காய் உரிக்கும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான தெய்வேந்திரனை அவரது குடும்பத்தினா் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தெய்வேந்திரன் வீட்டில் தனிமையிலிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT