போடி அருகே சனிக்கிழமை இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியை அடுத்த பாலகோம்பை அருகேயுள்ள கொழிஞ்சிபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் சுதாகா் (30). இவா் தனது மனைவி, குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தீபாவளிக்காக போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சுதாகா் குடும்பத்துடன் வந்தாா்.
இதனிடையே, சனிக்கிழமை காலை சங்கரப்பன் கண்மாய்க்கு சென்ற சுதாகா் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினா் அங்கு சென்று பாா்த்தபோது கருப்பசாமி கோயில் அருகே வாயில் நுரையுடன் மயங்கிக் கிடந்தாா்.
தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.