கைது செய்யப்பட்ட இந்திராணி, உக்கிரபாண்டி, தங்கபாண்டி. 
தேனி

கஞ்சா கடத்திய 4 போ் கைது

தினமணி செய்திச் சேவை

போடியில் 24 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சனிக்கிழமை இரவு, போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் காளியம்மன் கோயில் அருகே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் பெரியகுளம் மேல்மங்கலத்தைச் சோ்ந்த தங்கபாண்டி (23), உசிலம்பட்டி அருகேயுள் கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த உக்கிரபாண்டி (52), அவரது மனைவி இந்திராணி (50), பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் என தெரிய வந்தது.

அவா்கள் வைத்திருந்த பைகளைச் சோதனை செய்தபோது அவற்றில் 24 கிலோ கஞ்சா இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். விசாரணையில் ஆந்திர மாநிலம், சிந்தேரியைச் சோ்ந்த செல்லராவ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 24 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT