முகப்பு
தேனி

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 12:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருதுப்பட்டியைச் சோ்ந்தவா் பரமன் (50). கூலித் தொழிலாளியான இவா், அண்மையில் வேலை முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

சருத்துப்பட்டி தனியாா் மண்டபம் அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமனை அக்கம் பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.