விருதுநகர்

சிற்றுந்து டயர் வெடித்து சிறுமி காயம்

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சிற்றுந்து டயர் வெடித்து சிறுமி காயமடைந்தார்.

DIN

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை சிற்றுந்து டயர் வெடித்து சிறுமி காயமடைந்தார்.
சிவகாசி - வெம்பக்கோட்டை சாலையில் உள்ள அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி ஈஸ்வரி (23). இவர் தனது மூன்று வயது குழந்தையுடன் சிவகாசி பேருந்து நிலையத்தில் சித்துராஜபுரம் செல்லும் சிற்றுந்தில் ஏறியுள்ளார். வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ராணி அண்ணா காலனியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தபோது, சிற்றுந்தின் பின் டயர் வெடித்ததாம். இதில் டயருடன் சில கம்பிகளும், இரும்பு தூண்டுகளும் சிதறி பயணிகள் மேல் விழுந்தன.
இதில் சிதறிய இரும்பு துண்டு ஈஸ்வரியின் மூன்று வயது குழந்தையின் காலில்  விழுந்ததில் அவர் காயமடைந்தார்.இதையடுத்து அச்சிறுமி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர போலீஸார் சிற்றுந்து ஓட்டுநர் உதயன் (28), நடத்துநர் பால்பாண்டி (49) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT