விருதுநகர்

சமையல் செய்தபோது தீக்காயமடைந்த பெண் சாவு

ராஜபாளையத்தில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

DIN

ராஜபாளையத்தில் சமையல் செய்தபோது ஆடையில் தீப்பற்றியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ராஜபாளையம் லெட்சுமியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (36). இவரது மனைவி முக்தீஸ்வரி (30). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், சம்பவதன்று முக்தீஸ்வரி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது அவரது சேலையில் தீப்பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள தீக்காய சிறப்பு பிரிவிற்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முக்தீஸ்வரி செவ்வாய்க்கிழமை இறந்தார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT