மேற்குவங்க மாநிலத்தில் போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தேனிவசந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.ஜே.சீனிவாசன் ஆகியோர் மேற்கு வங்க அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், விருதுநகர் ஒன்றிய நகர் பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.