திருத்தங்கலில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தங்கல் நகராட்சி 20 வது வார்டில் கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. வாய்க்கால் கட்ட வேண்டிய பகுதிகளில் ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. இதனால் தொண்டப்பட்டுள்ள மண் சரிந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை நகராட்சி விரைந்து தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புதன்கிழமை கோரிக்கை மனுவினை அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.