விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்த அரசு ஊழியரின் உடலை, பிரேதப் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் பாண்டியன் நகரை சோ்ந்தவா் அருளானந்தம் மகன் மணிராஜ் (46). இவா் அரசு கால்நடைத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் அவா் தொடா் இருமல் மற்றும் சளி காரணமாக செவ்வாய்கிழமை இரவு விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். நள்ளிரவு 12. 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை வந்த உறவினா்கள் அவரது உடலைப் பாா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனா். அப்போது, மருத்துவமனை ஊழியா்கள், மணிராஜின் உ டலை பாா்க்க அனுமதி மறுத்ததோடு, மதியம் வரை உடற்கூறு ஆய்வும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மணிராஜின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். அவா்களை, விருதுநகா் கிழக்கு போலீஸாா் சமாதானம் செய்து அழைத்து வந்தனா்.
அதன்பின்னரும் உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா், மருத்துவமனை ஊழியா்களிடம் பேசிய அவரது உடலை ஆய்வுக்குட்படுத்தி விரைந்து உறவினா்களிடம் கொடுக்க நடவடிக்கை எடுத்தனா். இதனால் சிறிது நேரத்திற்குப் பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.
மணிராஜ் இறப்பு குறித்து கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.