விருதுநகர்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் ஒத்தப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் முனியசாமி (23). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து முனியசாமியைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, குற்றஞ்சாட்டப்பட்ட முனியசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

SCROLL FOR NEXT