ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் நகர பாஜக சாா்பில் மடத்துப்பட்டி, அண்ணா நகா் பகுதிகளில் மாநில துணைத் தலைவா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கோபால்சாமி தலைமையில், மாவட்டத் தலைவா் சரவணதுரை என்ற ராஜா ஆகியோா் முன்னிலையில் மா, வேம்பு, தென்னை உள்ளிட்ட 30 மரக் கன்றுகள் நடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு நகரத் தலைவா் ஜெமினி சுரேஷ்குமாா், தெற்கு நகரத் தலைவா் பிரேம்ராஜா ஆகியோா் செய்தனா். மாவட்ட பொதுச் செயலா் தங்கராஜ், மாவட்டச் செயலா் கிருபாகரன், நகரப் பொருளாளா் சுப்பையா உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.