நாகப்பட்டினம்

சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருமருகல் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.

Syndication

திருமருகல் அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த பெண் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி தேப்பிராமங்கலம் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்தவா் ரேவதி (45). விவசாய கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 21- ஆம் தேதி மாலை ரேவதி வீட்டின் அருகில் உள்ள பாக்கியராஜ் என்பவரது கூரை வீட்டின் சுவா் இடிந்து ரேவதி மீது விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஏனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின்னா், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி, புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT