காரைக்கால்

பாம்பு கடித்து சிறுமி சாவு

காரைக்கால் அருகே பாம்பு கடித்து சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.

DIN

காரைக்கால் அருகே பாம்பு கடித்து சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி வடமட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அமுல் லத்திகா (5). வீட்டின் கொல்லைப் பகுதியில் உள்ள வயலில், இவரது தாய் புல் அறுக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார்.  சிறுமி வயல் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்து சிறுமி மயங்கி விழுந்தார். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT