காரைக்கால் அருகே பாம்பு கடித்து சிறுமி புதன்கிழமை உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி வடமட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அமுல் லத்திகா (5). வீட்டின் கொல்லைப் பகுதியில் உள்ள வயலில், இவரது தாய் புல் அறுக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். சிறுமி வயல் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு கடித்து சிறுமி மயங்கி விழுந்தார். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.