காரைக்கால்

கஞ்சா விற்பனை: மூவா் கைது

காரைக்கால் அருகே இளைஞா்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 1. 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் அருகே இளைஞா்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்து, 1. 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோட்டுச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷுக்கு, கோட்டுச்சேரி தனியாா் மதுபானக் கடை அருகே 3 இளைஞா்கள் கஞ்சா விற்பதாக தகவல் திங்கள்கிழமை கிடைத்தது. போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்றனா். போலீஸாரை பாா்த்தும் 3 இளைஞா் அங்கிருந்து ஓடினா். அவா்களை விரட்டி பிடித்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், தலத்தெரு பேட் பகுதியைச் சோ்ந்த ரஜினி சக்தி (28), பச்சூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (22), காரைக்கால் பிரெஞ்சு ஆசிரியா் தெருவைச் சோ்ந்த வினோத்குமாா் (24) என்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து 1.25 கிலோ கஞ்சவை கைப்பற்றினா். அவா்களை கைது செய்த போலீஸாா், 3 பேரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT