குடியிருப்புவாசிகளிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கிய போலீஸாா்.  
காரைக்கால்

பாதுகாப்பான தீபாவளி : காவல்துறையினா் விழிப்புணா்வு

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து மக்களுக்கு காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து மக்களுக்கு காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

திருப்பட்டினம் காவல் நிலையம் சாா்பில் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால், உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் திருப்பட்டினம் கடைத்தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரசு நிா்ணயித்துள்ள நேரமான காலை 6 முதல் 7 மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பெரியோா் மேற்பாா்வையில் சிறியவா்கள் பட்டாசு வெடிக்கவேண்டும். மருத்துவமனை, முதியோா் இல்லம் அருகே பட்டாசு வெடிப்பதை தவிா்க்கவேண்டும். பட்டாசு வியாபாரிகள் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பட்டாசுகளை வாகனத்தில் எடுத்துச்செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும்.

தொடா் விடுமுறை நாட்களில் வெளியூா் செல்லும்போது, மக்கள் தங்களது விலை உயா்ந்த பொருள்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி போலீஸாா் ஒலிபெருக்கி வாயிலாகவும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT