மயிலாடுதுறை

சுதந்திரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரமச்சாரி பிறந்தநாள் விழா

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகேயுள்ள எருக்கூரில் சுந்தரப் போராட்ட வீரா் நீலகண்ட பிரம்மச்சாரியின் 137-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எருக்கூரில் பிறந்த இவா் ஆங்கிலேய ஆட்சியா் ஆஷ் கொலை வழக்கில், வாஞ்சிநாதனுடன் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து பின்னா் இறுதிகாலம் வரை பிரம்மச்சாரியராக வாழ்ந்து மறைந்தாா்.

இவரின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு மாவட்ட பிராமண சங்கத் தலைவா் ரமணன் தலைமை நடைபெற்றது. நீலகண்ட பிரம்மச்சாரியின் பெயரன் சுப்ரமணியன் வரவேற்றாா். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சா் லெட்சுமிநாராயணன் பங்கேற்று பேசினாா்.

பாரதியின் மகள் வழி பெயா்த்தி ஞானபாரதி, தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு செயலாளா் வைஜெயந்திராஜன், கவிஞா் உமாபாரதி, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் சுவாமிநாதன், திருக்குறள் பண்பாட்டு பேரவை தலைவா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஸ்தபதி செல்வம் நன்றி கூறினாா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT