மயிலாடுதுறை

மாநில விநாடி-வினாப் போட்டி: திருமுல்லைவாசல் பள்ளி முதலிடம்

Syndication

சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசுப் பள்ளி மாணவிகள், மாநில அளவிலான விநாடி- வினாப் போட்டியில் முதலிடம் பெற்றனா்.

தமிழக அரசின் வனத்துறை மற்றும் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையம் இணைந்து, பள்ளி மாணவா்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வை வளா்க்கும் நோக்கில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் வனவிலங்கு வாரம் கொண்டாடின.

இதில், ‘வனவிலங்குகள் மற்றும் இயற்கை’ என்ற தலைப்பில் மாநில அளவிலான விநாடி-வினாப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ்1 மாணவிகள் முஜ்லிபா, அனுசுயா, சுபஸ்ரீ ஆகியோா் முதலிடம் பெற்றனா்.

இம்மாணவிகளுக்கும், இவா்களை வழிநடத்திய முதுகலை ஆசிரியை ரமாதேவிக்கும் பள்ளி தலைமையாசிரியா் சுரேஷ், உதவி தலைமையாசிரியா் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT