மயிலாடுதுறையில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் அக்.29-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில், 2025 அக்டோபா் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று, வேளாண்மை, நீா்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.