தீக்குழியில் தவறி விழுந்த பக்தர் சாவு
கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
கோவில் தீமிதித் திருவிழாவின்போது திக்குழியில் தவறி விழுந்த பக்தர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இறந்தார்.
தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (60). இவர், கடந்த மாதம் 19-ம் தேதி வதிஷ்டாச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீமிதித்தார்.
அப்போது தீக்குழியில் தவறி விழுந்த நாகலிங்கம், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.