நாகப்பட்டினம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

DIN

வீர, தீர செயல்களில் ஈடுபட்ட பெண்கள், கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வீர தீர செயல்களில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2017-ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தாமாக முன்வந்து துணிச்சலுடன் பல நற்செயல்களை செய்த பெண்கள் இவ்விருதுக்குத் தகுதியானவர்கள்.
தகுதியானோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களை இணைத்து உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெ. 116-ஏ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை- 94 என்ற முகவரிக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365-253059 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT