நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம், வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெறுகிறது. தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம்
நடைபெறும்.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.
வட்டம் - ஊராட்சி என்ற அடிப்படையில், கூட்டம் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம்:
நாகப்பட்டினம் - ஏனங்குடி, கீழ்வேளூர் - சாட்டியக்குடி, திருக்குவளை - வாழக்கரை, வேதாரண்யம் - காடந்தேத்தி, மயிலாடுதுறை - அருண்மொழித்தேவன், தரங்கம்பாடி - உமையாள்புரம், சீர்காழி - பெருமங்கலம், குத்தாலம் - திருநாள்கொண்டச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.