நாகப்பட்டினம்

வேன் மோதி ஒருவர் சாவு

நாகை மாவட்டம், செம்பனார்கோயிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் வேன் மோதி உயிரிழந்தார்.

DIN

நாகை மாவட்டம், செம்பனார்கோயிலில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் வேன் மோதி உயிரிழந்தார்.
தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள முடிகண்டநல்லூர், அண்ணாநகரைச் சேர்ந்தவர் வீ. செல்வராஜ் (47). இவர், மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் செம்பனார்கோயில் சிவன் கோயில் அருகே  செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் செல்வராஜ் (47) நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, செம்பனார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநரான திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாதவனை (28) கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலயம்

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது!

5,142 ஏக்கா் சம்பா நெற்பயிா் மூழ்கியுள்ளது: திருவள்ளூா் ஆட்சியா்

உரிமையாளர் அடைய முடியாத உரிமை

செங்கம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT