திருக்கடையூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மணல் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் புதன்கிழமை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி, திருமெய்ஞானம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் மணல் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்றும், அருகில் உள்ள சுடுகாட்டு பரப்பளவு குறையும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், மணல் குவாரியிலிருந்து வந்த லாரியை வழிமறித்து போராட்டம் நடத்தினர்.
பொறையார் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.