நாகப்பட்டினம்

முதிர்வு தொகையை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாகப்பட்டினத்தில், பாலிசி முதிர்வு தொகைகளை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

நாகப்பட்டினத்தில், பாலிசி முதிர்வு தொகைகளை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 பிஏசிஎல் நிறுவனத்தில் பணம் செலுத்தியிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் இதில் பணியாற்றிய களப்பணியாளர்கள் ஆகியோர் இந்த நிறுவனத்தில் கட்டிய பணம் உரிய நேரத்தில் கிடைக்காததை கண்டித்தும், முதிர்வு தொகையை உடனடியாக வழங்கக் கோரியும் நாகை அவுரித்திடலில் யுனிவர்சல் வாடிக்கையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்துக்கு இதன் பொதுச் செயலர் பி.டி. இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் தினகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். பிஏசிஎல் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் லியாகத் அலி பங்கேற்று விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT